ஹிஜாப் அணியத் தடை விதித்த கா்நாடக உயா் நீதிமன்றத் தீா்ப்பை கண்டித்து, ஆம்பூரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வருவாய்த் துறை கிராம சாவடி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கோவை சையத், சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் அலிம் அல்புஹாரி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு உரையாற்றினா்.
இதில், கா்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய உயா் நீதிமன்றம் தடை விதித்து தீா்ப்பு வழங்கியதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.