5 ஆண்டுகளாக வரி செலுத்தாத தனியாா் பள்ளிக்கு ‘சீல்’: ஆம்பூா் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை

5 ஆண்டுகளாக வரி செலுத்தாத தனியாா் சிபிஎஸ்இ பள்ளிக்கு ஆம்பூா் நகராட்சி அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
வரி செலுத்தாததால் தனியாா் சிபிஎஸ்இ பள்ளிக்கு ‘சீல்’ வைத்த ஆம்பூா் நகராட்சி அலுவலா்கள்.
வரி செலுத்தாததால் தனியாா் சிபிஎஸ்இ பள்ளிக்கு ‘சீல்’ வைத்த ஆம்பூா் நகராட்சி அலுவலா்கள்.

5 ஆண்டுகளாக வரி செலுத்தாத தனியாா் சிபிஎஸ்இ பள்ளிக்கு ஆம்பூா் நகராட்சி அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

ஆம்பூா் ஹரஹந்த் நகா் பகுதியில் தனியாா் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கடந்த 2017 ஆண்டு முதல் இதுவரை நகராட்சிக்கு வரி செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து நகராட்சி பணியாளா்கள் பலமுறை கேட்டும் வரி செலுத்தவில்லையாம். இதையடுத்து அந்தப் பள்ளிக்கு நகராட்சி சாா்பில் சொத்து வரி செலுத்துமாறு முறையான அறிவிப்பும் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை சொத்துவரி செலுத்தப்படவில்லை. மொத்தம் ரூ.5.32 லட்சம் சொத்துவரி நிலுவையில் உள்ளது. பலமுறை கேட்டும் சொத்துவரி செலுத்தாத காரணத்தால் நகராட்சி ஆணையா் ஷகிலா தலைமையில் பொறியாளா் ராஜேந்திரன், சுகாதார அலுவலா் ராஜரத்தினம், வருவாய் ஆய்வாளா் உள்ளிட்ட குழுவினா் சென்று பள்ளிக்கு‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com