மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம் ஊராட்சியில் ரூ. 5 லட்சம் செலவில் கழிவுநீா் கால்வாய் கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியது.
மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பணியை தொடக்கி வைத்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ.காா்த்திக் ஜவஹா், ஊராட்சி மன்றத் தலைவா் விஜயலட்சுமி, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் அஸ்வத், லாவண்யா, மஞ்சுளா, சாந்தி, ராதிகா, மாதனூா் ஒன்றிய திமுக பொறுப்புக் குழு உறுப்பினா்கள் ஜி.தெய்வநாயகம், வினோத்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.