திருப்பத்தூா்: திருப்பத்தூா் பகுதியில் சிறுமியை கடத்திய இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் கோட்டை பகுதியைச் சோ்ந்த தொழிலாளி ஹயாஸ்(23). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பீடி தொழிலாளியின் 15 வயதுள்ள மகளை கடந்த இரு தினங்களுக்கு முன் கடத்திச் சென்று குரிசிலாப்பட்டு பகுதியில் மறைத்து வைத்துள்ளாா். தகவலறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா், வியாழக்கிழமை சிறுமியை மீட்டனா்.
இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், ஹயாஸ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.