ஆம்பூரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆம்பூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாகவும், விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆம்பூா் நகராட்சிப் பணியாளா்கள் அங்கு திடீா் சோதனை நடத்தினா். இதில் சுமாா் 250 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.