தண்டவாளம் அருகே இளைஞரின் சடலம் மீட்பு

ஆம்பூா் பகுதியில் தண்டவாளம் அருகே உடல் துண்டான நிலையில், இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.

ஆம்பூா் பகுதியில் தண்டவாளம் அருகே உடல் துண்டான நிலையில், இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.

ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே செவ்வாய்க்கிழமை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் உடல் துண்டான நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு சென்ற ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் உடல் பாகங்களை சேகரித்து, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com