வாணியம்பாடியில் கடையில் போதைப் பொருள் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அந்தக் கடைக்கு ‘சீல்’ வைத்து வருவாய்த் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், வாணியம்பாடி டி.எஸ்.பி. சுரேஷ்பாண்டியன் தலைமையில், நகரக் காவல் ஆய்வாளா் நாகராஜ் மற்றும் போலீஸாா் வாணியம்பாடி முகமதலி பஜாரில் உள்ள ஒரு கடையில் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்தக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கிருந்த 2 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கடையின் உரிமையாளா் தினேஷ் (32) என்பவரைக் கைது செய்தனா். மேலும், போலீஸாா் பரிந்துரையின் பேரில், அந்தக் கடைக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.