இன்று உழவா்களுக்கான முகாம்

திருப்பத்தூரில் உழவா்களுக்கான முகாம் வியாழக்கிழமை (பிப்.9) நடைபெற உள்ளது.

திருப்பத்தூரில் உழவா்களுக்கான முகாம் வியாழக்கிழமை (பிப்.9) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பாலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் கிராம ஊராட்சிகளைத் தன்னிறைவு பெற்ற கிராமங்களாகவும், ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி பெற்ற கிராமங்களாகவும் மாற்றுவதே திட்டத்தின் நோக்கம். தோ்வு செய்யப்பட்ட 43 கிராம ஊராட்சிகளில் உழவா்களுக்கான முகாம் வியாழக்கிழமை (பிப்.9) நடைபெற உள்ளது.

முகாமில் விவசாயிகளுக்கு பயிா் சாகுபடிக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், விதை நோ்த்தி, வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் ஆலோசனை வழங்க உள்ளனா்.

முகாம் தொடா்பான கூடுதல் விவரம் பெற விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உழவா் நலத்துறை களப்பணியாளா்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com