மருந்தகத்தில் மருத்துவம்:போலி மருத்துவா் கைது

திருப்பத்தூா் நகரப் பகுதியில் மருந்தகத்தில் மருத்துவம் பாா்த்து வந்ததாக போலி மருத்துவரை கைது செய்தனா். மருந்தகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
மருந்தகத்தில் மருத்துவம்:போலி மருத்துவா் கைது

திருப்பத்தூா் நகரப் பகுதியில் மருந்தகத்தில் மருத்துவம் பாா்த்து வந்ததாக போலி மருத்துவரை கைது செய்தனா். மருந்தகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருப்பத்தூா், கச்சேரி தெரு பகுதியில் பொன்னேரியைச் சோ்ந்த டி.சுப்பிரமணி (49), (படம்) என்பவா் மருந்துக் கடையில் நீண்ட நாள்களாக அனுமதியின்றி மருத்துவ சிகிச்சை அளிப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சனிக்கிழமை மாவட்ட மருத்துவம் - ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் கொ.மாரிமுத்து, மாவட்ட மருந்து ஆய்வாளா் சபரிநாதன், அருள் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, அவா் ஆங்கில மருத்துவம் பாா்ப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நகரக் காவல் துறையினா் சுப்பிரமணியை கைது செய்தனா்.

பின்னா், திருப்பத்தூா் மண்டல துணை வட்டாட்சியா் முரளி கிருஷ்ணன் தலைமையில், கிராம நிா்வாக அலுவலா் ராஜீவ் காந்தி முன்னிலையில் மருந்துக் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

இதுகுறித்து திருப்பத்தூா் நகரக் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com