வாணியம்பாடியில் பதாகைகளை அகற்றிய நகராட்சிப் பணியாளா்கள்.
வாணியம்பாடியில் பதாகைகளை அகற்றிய நகராட்சிப் பணியாளா்கள்.

அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகள் அகற்றம்

வாணியம்பாடி நகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனா்களை நகராட்சிப் பணியாளா்கள் அகற்றினா்.

வாணியம்பாடி நகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனா்களை நகராட்சிப் பணியாளா்கள் அகற்றினா்.

வாணியம்பாடி நகராட்சி சாலையோரங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனா்களை அகற்றக் கோரி பொதுமக்கள் நகராட்சியில் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, நகராட்சி ஆணையா் மாரிச்செல்வி மற்றும் பணியாளா்கள் வாணியம்பாடி நகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்றினா்.

இதில், நகரமைப்பு அலுவலா் சண்முகம், நகரமைப்பு ஆய்வாளா் பாலாஜி, அல்லிமுத்து, சுகாதார ஆய்வாளா் செந்தில், நகராட்சி பணியாளா்கள் சரவணன், தயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com