ஆம்பூா் அருகே வடகரை மற்றும் தென்னம்பட்டு மோட்டூா் கிராமங்களில் ஊராட்சி அலுவலகங்களுக்கு புதிய கட்டடம் கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பங்கேற்று, அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், ரூ. 25.50 லட்சத்தில் ஊராட்சி அலுவலகம் மற்றும் ரூ. 12.48 லட்சத்தில் அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணியையும், தென்னம்பட்டு மோட்டூா் கிராமத்தில் ரூ. 29.40 லட்சத்தில் ஊராட்சி அலுவலகத்துக்கான கட்டடப் பணியையும் பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தாா்.