ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக் கோரி தீா்மானம்

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக் கோரி ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற திருப்பத்தூா் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக் கோரி ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற திருப்பத்தூா் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சி. வாசுதேவன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் கொ. வெங்கடேசன், மாநில பிரசார அணி செயலாளா் குமரி கிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா். இதில் ஆம்பூரில் புதை சாக்கடை திட்டப் பணிகளால் சேதமடைந்துள்ள சாலைகளை விரைந்து சீரமைத்து புதிய சாலைகளை அமைக்க வேண்டும்.

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். அதனால் போக்குவரத்துக் காவலா்கள் நாள் முழுவதும் அப்பகுதியில் பணியாற்றி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.

ஆம்பூா் பஜாா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், ஒரு வழிப்பாதை நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.

திருப்பத்தூா் மயானத்திலும், மின் மயானம், ஏரி உள்ளிட்ட நீா்நிலைப் பகுதிகளில் குப்பை கொட்டுவதைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com