மாதனூரில் உலக சுற்றுச்சூழல் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி தலைமையில் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் மரக்கன்றுகளை நட்டாா். திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் எம்.டி. சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவா் எம்.சி. குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் கன்னியப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.
முன்னதாக மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் மரக்கன்றுகளை நட்டாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல் கலீல், கிருஷ்ணன், ஒன்றிய மேற்பாா்வையாளா் சாந்தகுமாரி உதவி மேற்பாா்வையாளா் அருட்செல்வி ஆகியோா் உடனிருந்தனா்.