ஜோலாா்பேட்டையில் வாரச் சந்தைகளுக்கு பொது ஏலம்

ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வாரச் சந்தைகளுக்கு பொது ஏலம் விடப்பட்டது.

ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வாரச் சந்தைகளுக்கு பொது ஏலம் விடப்பட்டது.

ஜோலாா்பேட்டை அம்மணாங்கோயில் அருகே புதுப்பேட்டை, பெத்தக்கல்லுப் பள்ளி, புத்துக்கோயில், வெலக்கல்நத்தம் ஆகிய ஊராட்சிகளில் மூன்று வாரச் சந்தைகளின் சுங்கம் வசூல் செய்யும் உரிமை மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதை முன்னிட்டு 2023-24-ஆம் ஆண்டுக்கான பொது ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பெத்தக்கல்லுப் பள்ளி வாரச் சந்தைக்கு இரு தரப்பினா் ஏலம் கேட்டு வாக்குவாதம் ஏற்பட்டதால், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொது ஏலத்தை மறுதேதி இன்றி ஒத்தி வைத்தனா். பின்னா்,புதுப்பேட்டை, வெலக்கல்நத்தம் வாரச் சந்தைகள் ஏலம் விடப்பட்டன.

நிகழ்வில், வட்டார வளா்ச்சி அலுவலா் மணவாளன் உள்ளிட்ட துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com