திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 296 மனுக்கள்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 296 மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 296 மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை என 296 மனுக்களை பெற்றாா். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.02 லட்சம் மதிப்பில் நல வாரிய உதவித் தொகைக்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, உதவி ஆணையா் (கலால்) பானு, உதவி இயக்குநா் ஊராட்சிகள் விஜயகுமாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com