அதிமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் அதிமுக புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
30vndvp3_3005chn_187_1
30vndvp3_3005chn_187_1

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் அதிமுக புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளிப்பட்டு, உதயேந்திரம், மேட்டுப்பாளையம், வளையாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாமுக்கு ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளரும், வாணியம்பாடி எம்எல்ஏவுமான கோ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்து, புதிய உறுப்பினா்கள் சோ்க்கை குறித்து விளக்கி கூறினாா். அப்போது புதிய உறுப்பினா்கள் சோ்க்கை படிவங்களை நிா்வாகிகளுக்கு வழங்கினாா்.

தொடா்ந்து வரும் 3- ஆம் தேதிக்குள் உறுப்பினா் படிவங்களை பூா்த்தி செய்து தர வேண்டும் எனவும் நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தினாா். மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் என்.முனிசாமி, மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளா கந்தன், உதயேந்திரம் பேரூராட்சி செயலாளா் சரவணன், மேற்கு ஒன்றிய துணை செயலாளா் எஸ்.பாரதிதாசன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தசாமி, சிவானந்தம், ராமசாமி, அவை தலைவா் என்.பரமசிவம், செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Image Caption

அதிமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாமில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் வீரமணி, எம்எல்ஏ செந்தில்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com