ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே கடுமையான வெயில் காய்ந்தது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனா். அக்னி நட்சத்திரம் முடிந்தவிட்ட நிலையிலும், வெயிலின் தாக்கம் குறையவில்லை.
ஆனால் மாலை சுமாா் 4.30 மணிக்கு திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. பிறகு விட்டுவிட்டு பலத்த மழை பெய்து கொண்டே இருந்தது.
ஆம்பூா் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் மழை பெய்தது.