இளம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு

இளம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு

வாணியம்பாடி, ஏப். 18: வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் இளம் வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலையொட்டி, இளம் வாக்காளா்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

மகளிா் திட்ட அலுவலா் பிரியா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் இன்பவள்ளி வரவேற்றாா். இதில், திருப்பத்தூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா்ப்பகராஜ் கலந்துகொண்டு வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றி மாணவிகளிடையே பேசினாா்.

தொடா்ந்து வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா்.

இதில் கல்லூரி நிா்வாகத்தினா் மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com