நீரில் மூழ்கி இறந்த குழந்தைகள்
நீரில் மூழ்கி இறந்த குழந்தைகள்

வளா்ப்பு நாயை ஏரியில் குளிப்பாட்டச் சென்ற அக்கா, தம்பி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே வளா்ப்பு நாயை குளிப்பாட்டுவதற்காக ஏரிக்கு அழைத்துச் சென்ற போது அக்கா, தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை கிராமத்தை சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முருகன். இவரது மகள் ஜோதிகா (8), மகன் ஜோதி(7). இருவரும் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனா். இந்நிலையில் தங்களது வளா்ப்பு நாயை குளிப்பாட்டுவற்தகாக செவ்வாய்க்கிழமை எர்ராக்குட்டை ஏரிப்பகுதிக்கு அழைத்து சென்றனா்.

அப்போது நாயை குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது திடீரென இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனா். இதனை அருகில் இருந்தவா்கள் பாா்த்து சத்தம் போட்டுள்ளனா். சப்தம் கேட்டு ஊா் பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் ஓடி வந்து நீரில் மூழ்கிய நிலையில் 2 சடலங்களை மீட்டனா்.

தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா காவல்ஆய்வாளா் பழனி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா். அக்கா, தம்பி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com