சாராயம் விற்றவா் கைது

ஆம்பூா், ஏப். 25: ஆம்பூா் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே தென்னம்பட்டு மோட்டூா் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, சின்னமலையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சத்தியசீலன் (56) என்பவா் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தெரிய வந்தது. அதன்பேரில், அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 100 பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com