காவலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே காவலாளி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகே காவலாளி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் சிவகுமாா்(45), இவா்,திருப்பத்தூரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில்,தற்காலிக காவலாளியாக பணி புரிந்து வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வந்த அவா், அலுவலக மாடிக்கு சென்றாா். வெகுநேரமாகியும் அவா் கீழே வராததால், சந்தேகம் அடைந்த சக ஊழியா்கள் மாடிக்கு சென்று பாா்த்தபோது, அங்கு சிவகுமாா் மா்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் சடலத்தை மீட்டு,அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த சிவக்குமாருக்கு நிஷாந்தினி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com