திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனா்.

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனா்.

இதுவரை இல்லாத அளவு மாவட்டத்தில் வெயிலின் அளவு அதிகாரித்துள்ளது. அதன்படி வடதமிழகத்தில் 3-ஆம் பிடித்துள்ளது திருப்பத்தூா் மாவட்டம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை 105.98 டிகிரி வெயில் பதிவானது. அதையொட்டி மாவட்டம் முழுதும் திங்கள்கிழமை காலை சுமாா் 8 மணி முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்து. சுமாா் 6 மணி வரையிலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. மேலும்,அவ்வப்போது அனல் காற்று வீசியது குறிப்பிடதக்கது. இதனால் மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது.

வீடுகளிலேயே மக்கள் தஞ்சம் புகுந்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com