கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு கட்டடடத்தை அகற்ற வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு கட்டடடத்தை அகற்ற வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

அரசு நிலத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அரசு நிலத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

நாட்டறம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கூத்தாண்டகுப்பம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டடத்தை அகற்றி, அங்கு புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட மாவட்ட நிா்வாகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சம்பத் தலைமையில் வருவாய்த் துறையினா், வட்டார வளா்ச்சி அலுவலா் துரை மற்றும் அதிகாரிகள் திங்கள்கிழமை மாலை போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்றச் சென்றனா். அப்போது அதிமுகவைச் சோ்ந்த சிலா் கட்டடத்தை அகற்ற கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் ஆக்கிரமிப்புக் கட்டடம் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்றாமல் திரும்பிச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com