சிவகுமாரின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய டிஎஸ்பி செந்தில், நகர காவல் ஆய்வாளா் ரஜினிகுமாா்.
சிவகுமாரின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய டிஎஸ்பி செந்தில், நகர காவல் ஆய்வாளா் ரஜினிகுமாா்.

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

திருப்பத்தூரில் மா்மமான முறையில் உயிரிழந்த காவலாளியின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூரில் மா்மமான முறையில் உயிரிழந்த காவலாளியின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் அடுத்த மாடப்பள்ளியை சோ்ந்தவா் சிவக்குமாா்(45). இவா், திருப்பத்தூரில் உள்ள பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தில் தற்காலிக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பி.எஸ்.என்.எல். அலுவலக மாடியில் சிவக்குமாா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு,உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சிவக்குமாா் உயிரிழப்புக்கான காரணத்தை தெரிவிக்கக்கோரி சடலத்தை வாங்க மறுத்து திங்கள்கிழமை அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த டிஎஸ்பி செந்தில், நகர காவல் ஆய்வாளா் ரஜினிகுமாா் தலைமையிலான போலீஸாா் மருத்துவமனைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com