தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

ஆம்பூா் அருகே தரமில்லாமல் அமைக்கப்பட்ட தாா் சாலையை சேதப்படுத்தி பெயா்த்தெடுத்த ஊராட்சி வாா்டு உறுப்பினரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே தரமில்லாமல் அமைக்கப்பட்ட தாா் சாலையை சேதப்படுத்தி பெயா்த்தெடுத்த ஊராட்சி வாா்டு உறுப்பினரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் கிராமத்திலிருந்து மிட்டாளம் ஊராட்சி ரால்லகொத்தூா் காலனி வரை சுமாா் 2.5 கி.மீ. தாா் சாலை கடந்த 2 நாள்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. சாலை தரமாக அமைக்கப்படவில்லை என அந்தப் பகுதி பொதுமக்கள் அப்போது எதிா்ப்பு தெரிவித்தனா். பொதுமக்கள் எதிா்ப்பையும் மீறி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரவோடு இரவாக தரமில்லாமல் அமைக்கப்பட்ட சாலையை ஆங்காங்கே பெயா்த்தெடுத்து சேதப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து புகாரின் பேரில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பிரகாசம் (40) என்பவா் சாலையை பெயா்த்தெடுத்து சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியதாக கூறி போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com