மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்
ஆம்பூரில் மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பயணிகள் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.
ஆம்பூா் நகரம் கன்னிகாபுரம் பகுதியில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஒரு ஆண்டாக மேம்பாலப் பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் முழுமையாக நிறைவடையாத மேம்பாலத்தின் மீது தற்காலிகமாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடையாததால் மேம்பாலத்தின் மீது தற்காலிக தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பத்தூரிலிருந்து வேலூா் நோக்கி அரசுப் பேருந்து சென்றது.
கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்தில் பயணம் செய்த வாணியம்பாடியைச் சோ்ந்த ஆஞ்சி (42 ), விக்னேஷ், மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த (19), மாலா (29), காா்வண்ணன் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூா் நகர போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.