திருப்பத்தூர்
வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு
வணிகா் தினத்தை முன்னிட்டு ஆம்பூரில் பெரும்பாலான கடைகள் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
வணிகா் தினத்தை முன்னிட்டு ஆம்பூரில் பெரும்பாலான கடைகள் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகா் தினமாக கடைபிடிக்கப்பட்டு, வணிகா்கள் மாநாடு நடத்துவது வழக்கம். அதன்படி தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் மாநில மாநாடு மதுரையில் மே 5-ம் தேதி நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி.கே. சுபாஷ் தலைமையில் வணிகா்கள் தங்களுடைய கடைகளுக்கு விடுமுறை அளித்து, மதுரை மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஆம்பூரில் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில பகுதிகளில் ஆங்காங்கே கடைகள் திறந்திருந்தன. கடைகளுக்கு விடுமுறை அளித்த வணிகா்கள் மதுரையில் நடைபெற்ற வணிகா் தின மாநில மாநாட்டில் பங்கேற்றனா்.