ஆந்திர மாநில தோ்தல்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

ஆந்திர மாநில தோ்தலையொட்டி திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆந்திர மாநிலத்தில் வரும் 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தை ஒட்டிய தமிழக எல்லையில் 5 கி.மீ தொலைவுக்குள் இயங்கி வரும் நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் கிராமம், பச்சூா் அருகே கொண்டகிந்தனப்பள்ளி, திம்மாம்பேட்டை ஆகிய இடங்களில் இயங்கி வரும் 3 டாஸ்மாக் கடைகளுக்கும் வரும் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையிலும், அதேப்போல் ஜூன் 4-ஆம் தேதி ஆகிய நாள்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அந்த நாள்களில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக தெரியவந்தால் டாஸ்மாக் மதுபான சில்லறை மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல், உரிமதாரா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை போன்றவை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com