சாலை விபத்தில் காவலா் உயிரிழப்பு
நாட்டறம்பள்ளி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் காவலா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் தாலுகா தாரமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (40) .இவா் வாணியம்பாடி மதுவிலக்குப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி சுமித்ரா இவரும் வாணியம்பாடி மதுவிலக்குப் பிரிவில் வேலை செய்து வருகிறாா். வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நாட்டறம்பள்ளி அருகே ஏலரப்பட்டி கிராமத்தில் இருந்து ஆறுமுகம் வாணியம்பாடிக்கு மோட்டாா் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தாா்.
தேசிய நெடுஞ்சாலையில் கல்லாறு அருகே சாலையை கடந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி பைக் மீது மோதியது. இதில் ஆறுமுகம் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே இறந்தாா். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசாா் சம்பவ இடம் சென்று இறந்தவா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இறந்த காவலா் ஆறுமுகத்துக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.