எரியாத மின் விளக்குகள்: தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

திருநின்றவூர் பேரூராட்சியில் தெரு விளக்குகள் எரியாததால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏந்தி செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடத்தினர்.
Updated on
1 min read

திருநின்றவூர் பேரூராட்சியில் தெரு விளக்குகள் எரியாததால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏந்தி செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடத்தினர்.
திருநின்றவூர் பேரூராட்சியில் 13-ஆவது வார்டில் உள்ள கம்பர் தெரு, பாரதியார் தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை.
இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை
எடுக்கவில்லை.
இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருநின்றவூர் பேரூராட்சி அலுவலகம் அருகே கிளை செயலாளர் பி.பசுபதி தலைமையில் தீப்பந்தம் ஏந்தி நூதனப் போராட்டம் நடத்தினர்.  
இதில், சங்க நிர்வாகிகள் மகேஷ்பாலு, அபினேஷ், செந்தில், ராஜா, பச்சையம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com