தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் 10 பவுன் செயின் பறிப்பு

திருவள்ளூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச் சரடை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
Updated on
1 min read

திருவள்ளூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச் சரடை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
திருவள்ளூரை அடுத்த முருக்கஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (34). தனியார் நிறுவன ஊழியர். கோடை விடுமுறையையொட்டி, சூரியபிரகாஷின் வீட்டுக்கு அவரது சகோதரிகள் முனியம்மாள் (38), விஜயலட்சுமி (30) ஆகியோர் வந்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில், வீட்டின் பின்புற கதவை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள், தூங்கிக் கொண்டிருந்த முனியம்மாள், விஜயலட்சுமி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி சரடினை ஒரே நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
செயின் பறிபோனதை அறிந்த இருவரும் கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சூரியபிரகாஷ் அளித்த புகாரின்பேரில், மணவாள நகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com