பொன்னேரி அருகே, குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள கூடுவாஞ்சேரி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக, குடிநீர் முற்றிலுமாக விநியோகம் செய்யப்படாததால், பெரிதும் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்கள், இது குறித்து மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
ஆனால், இதன்பேரில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த அவர்கள், சீராக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி கையில் காலிக் குடங்களுடன் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பொன்னேரி போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உடனடியாக குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
இந்தியாவின் மின்னல் வேக மனிதர்! தேசிய சாதனையை முறியடித்த குரிந்தர்வீர் சிங்!

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


