கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவள்ளூரில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எம்.செல்வம் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஆர்.பூபாலன் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் என்.நித்தியானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். இதில், புதிய நிர்வாகிகளாக இச்சங்கத்தின் தலைவராக எம். செல்வம், செயலாளராக அங்கமுத்து, பொருளாளராக சேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தில், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை கூட்டுறவு நியாய
விலைக் கடை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். அதேபோல், கூட்டுறவுத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்துதல் மற்றும் பணி வரன்முறைப்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், கூட்டுறவு சங்க அச்சக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: ஆட்சியா்
காரில் மதுபாட்டில்களை கடத்திய அதிமுக நிா்வாகி உள்ளிட்ட இருவா் கைது

மாநில உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கிறது: பெ. சண்முகம்

தென்மாநிலங்களின் குரலை பிரதமா் ஏற்க வேண்டும்: மு. வீரபாண்டியன்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

