அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை பணியாளர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யும் வகையில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில அளவில் கிராமங்களில் தரமான பள்ளிக் கல்வி கிடைக்கச்செய்யும் நோக்கத்தில் 6 கி.மீ. தூரத்துக்குள் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளும், 4 கி.மீ. தூரத்தில் நடுநிலைப்பள்ளிகளும், 2 கி.மீ. தூரத்துக்குள் ஆரம்பப் பள்ளிகளும் தொடங்கி செயல்பட்டு வருகின்றன.
மேலும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் நோக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக அதிக மாணவ, மாணவியரை ஈர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சலுகைகளை வழங்கிய நிலையிலும், பொதுமக்களிடையே ஆங்கிலக் கல்வி மோகம் காரணமாக நகரங்களில் தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பி வரும் நிலை உள்ளது.
இதற்குக் காரணம் கிராமங்களுக்கு சரியான நேரத்தில் ஆசிரியர்களும், பணியாளர்களும் செல்லாமல் இருப்பதுதான் என்பது ஆய்வில் தெரிய வந்தது.
இதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வருகை அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட நேரத்துக்குள் இருக்க வேண்டும்.
எனவே, அவர்களது வருகையைப் பதிவு செய்வதற்கு பயோமெட்ரிக் கருவி பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, முதல் கட்டமாக மாநில அளவில் 7,726 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.45.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் கணிப்பொறி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த 10-ஆம் தேதி பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் 2 கணினிகள் தேவைப்படும்.
தற்போது பள்ளிகளில் உள்ள கணினிகள் மிகவும் பழைமையானதாக உள்ளதால் அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. இதனால் ஆசிரியர்கள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் கணிப்பொறி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: திருவள்ளூர் மாவட்டத்தில் 295 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான பயோமெட்ரிக் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே பள்ளிகளில் உள்ள கணினிகளையே பயன்படுத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நிலையில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள், கைரேகைப் பதிவு மற்றும் கையொப்பம் பெறும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

தேசிய நெடுஞ்சாலையில் லாரி தீப்பற்றி ரூ. 20 லட்சம் பொருள்கள் சேதம்

கைப்பேசி திருடிய இளைஞா் போலீஸில் ஒப்படைப்பு
கோயில் அலுவலகத்தின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: 3 இளைஞா்கள் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


