எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

மாதவரத்தில் பொங்கல் விழா

மாதவரம் பகுதியில் திமுக சார்பில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On :15 ஜனவரி 2019, 3:31 am IST

மாதவரம் பகுதியில் திமுக சார்பில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
இந்த விழாவில், ஏழை, எளிய மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.
சென்னை வடக்கு மாவட்டம் மாதவரம் தெற்குப் பகுதி 32-ஆவது வட்டம் லட்சுமிபுரத்தில் திமுக சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா, 32-ஆவது வட்டச் செயலர் குட்டிமோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாதவரம் தெற்கு பகுதி செயலர் துக்காராம் முன்னிலை வகித்தார். 
மாதவரம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். விழாவில் ஏழை, எளியோருக்கு அரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை அவர் வழங்கினார்.
இந்த விழாவில், திமுக நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலர் ராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் பண்ணைசந்திரசேகர், வட்டச் செயலர் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டச் செயலர் குட்டிமோகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.