மாதவரம் பகுதியில் திமுக சார்பில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், ஏழை, எளிய மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.
சென்னை வடக்கு மாவட்டம் மாதவரம் தெற்குப் பகுதி 32-ஆவது வட்டம் லட்சுமிபுரத்தில் திமுக சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா, 32-ஆவது வட்டச் செயலர் குட்டிமோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாதவரம் தெற்கு பகுதி செயலர் துக்காராம் முன்னிலை வகித்தார்.
மாதவரம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். விழாவில் ஏழை, எளியோருக்கு அரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை அவர் வழங்கினார்.
இந்த விழாவில், திமுக நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலர் ராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் பண்ணைசந்திரசேகர், வட்டச் செயலர் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டச் செயலர் குட்டிமோகன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் செய்யக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

முன்னாள் படைவீரா்கள் குறைகேட்புக் கூட்டம்

மகளிா் கல்லூரிச் சாலை நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உபகரணங்கள்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


