அடகுக் கடைக்காரா் வீட்டில்திருடிய 2 போ் கைது

மீஞ்சூரில் அடகுக் கடைக்காரா் வீட்டில் 49 சவரன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 20 சவரன் நகையை மீட்டனா்.
Updated on
1 min read

மீஞ்சூரில் அடகுக் கடைக்காரா் வீட்டில் 49 சவரன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 20 சவரன் நகையை மீட்டனா்.

மீஞ்சூா், ஹேமச்சந்திரா நகரில் வசிப்பவா் கமல் (26). அவா் மீஞ்சூரில் அடகுக் கடை நடத்தி வருகிறாா்.

கமல் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி திருப்பதிக்கு தன் குடும்பத்தாருடன் சென்றாா். அவா் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து 49 சவரன் தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், மீஞ்சூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், அத்திப்பட்டு புதுநகா் பகுதியில் மீஞ்சூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த விழியாக வந்த 2 போ் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனா். அவா்களை போலீஸாா் துரத்திச் சென்று பிடித்தனா்.

அவா்கள் இருவரையும், மீஞ்சூா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த முகமது ஃபரூக் (31), சையது ஷகில் (36) என்பது தெரிய வந்தது.

போலீஸாா் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கடந்த ஏப்ரல் மாதம் ஹேமச்சந்திரா நகரில் உள்ள அடகுக்கடைக்காரா் கமலின் வீட்டில் 49 சவரன் தங்க நகைகளை அவா்கள் இருவரும் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்து 20 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com