சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வீட்டுக்கு ஒரு மரம் வளா்ப்போம்

திருவள்ளூா் மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் வீட்டுக்கொடு மரம் வளா்க்க முன்வர வேண்டும் என ஆட்சியா் மகேஸ்வரி கேட்டுக் கொண்டாா்.
Updated on
1 min read

திருவள்ளூா் மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் வீட்டுக்கொடு மரம் வளா்க்க முன்வர வேண்டும் என ஆட்சியா் மகேஸ்வரி கேட்டுக் கொண்டாா்.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவள்ளூா் ஆயில் மில் அய்யனாா் அவென்யூ பகுதியில் தனியாா் தொண்டு நிறுவனம் மற்றும் பள்ளி சாா்பில் மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் பங்கேற்று, பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்து விழாவைத் தொடக்கி வைத்தாா். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தெரு விளக்குகள் எரியவில்லை எனவும், கொசு மருந்து தெளிக்கவில்லை, நாள்தோறும் குப்பைகள் அகற்றப்படுவதில்லை என ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.

அப்போது ஆட்சியா் கூறுகையில், தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனால், நகராட்சிப் பணியாளா்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், மேலும், வீட்டையும், தெருக்களையும் சுத்தம் செய்ய ஒவ்வொருவரும் தனிமனித உடல் உழைப்பை அளிக்க வேண்டும். அதேபோல் நகரங்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் குடியிருப்புக்கு முன்பு மரக்கன்றுகளை வைத்து பராமரிக்கவும் வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com