திருவள்ளூரில் 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
By DIN | Published On : 04th January 2019 04:33 AM | Last Updated : 04th January 2019 04:33 AM | அ+அ அ- |

திருவள்ளூர் பகுதியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்காடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் பகுதியில் தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவோரை கண்டறிய, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கவிகுமார் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பஜார், குளக்கரை பகுதியில் உள்ள அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது தெரியவந்தது. உடனே அந்தக் கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள் என 100 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் அவற்றை நகராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டு சென்று அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.