விபத்தில் மூதாட்டி சாவு

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் காயம் அடைந்த மூதாட்டி உயிரிழந்தார்.
Updated on
1 min read


திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் காயம் அடைந்த மூதாட்டி உயிரிழந்தார்.
 திருவள்ளூர் அருகே குன்னத்தூர் மேட்டுக்காலனி தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (70). இவர் தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக போளிவாக்கத்தில் உள்ள விநாயகர் கோயில் தெருவில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர் எதிர்பாராதவிதமாக சரோஜா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். 
 இதில், பலத்த காயம் அடைந்த சரோஜாவை அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு  சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
 இதுகுறித்து சரோஜாவின் உறவினர் சாந்தி (42) மணவாளநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com