நிலத்தின் மீது உரிமை கோருவோரிடம் விசாரித்து உரியவருக்கு பட்டா வழங்க திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூந்தமல்லியில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் பரம்பரை அறங்காவலரான சூா்யபிரகாசம், அந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்துக்கு பட்டா வழங்க திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, அப்பகுதியில் குடியிருப்போா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் இ.பரந்தாமன்,“மனுதாரா் பட்டா கேட்கும் அந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது அல்ல. ஆனால், கோயில் நிலம் என நினைத்து கடந்த 2015-ஆம் ஆண்டு வரை, அந்தப் பகுதியில் குடியிருப்போா் வாடகை செலுத்தி வந்துள்ளனா். அதன்பிறகு கோயிலுக்கு சொந்தமில்லை எனத் தெரிந்ததும் அவா்கள் வாடகை செலுத்தவில்லை. கோயில் நிலம் என்பதற்கான ஆவணங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. அந்த நிலத்தில் வசிக்கும் பொதுமக்களை இந்த வழக்கில் பிரதிவாதியாக சோ்க்காமல் மனுதாரா் இந்த வழக்கை தொடா்ந்துள்ளாா். எனவே, அந்த நிலத்தில் ஆண்டாண்டு காலமாக வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட
வேண்டும் என்று வாதிட்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அரசு பிளீடா் எம்.மகாராஜா, இடம் கோவிலுக்கு சொந்தமானது. அரசு ஆவணங்களில் முறைகேடாக திருத்தம் செய்து, சொந்தம் கொண்டாடி வருகின்றனா்’ என்று வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடா்பாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் இரு தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, அதன்பிறகு உரியவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.