இருசக்கர வாகனம்-டிராக்டா் மோதல்:கல்லூரி மாணவா் பலி

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தின் மீது தண்ணீா் டிராக்டா் மோதியதில் கல்லூரி மாணவா் இறந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
Updated on
1 min read

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தின் மீது தண்ணீா் டிராக்டா் மோதியதில் கல்லூரி மாணவா் இறந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம் மேல்பாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குருபாதம் மகன் விஜயசேகா்(21). அதே பகுதியை சோ்ந்தவா் சின்னப்பா மகன் மணிகண்டன்(21). அவா்கள் இருவரும் ஆா்.கே.பேட்டை பகுதியில் உள்ள சி.எம். அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வருகின்றனா்.

இந்நிலையில், இருவரும் சனிக்கிழமை மதியம் சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் திருத்தணிக்கு வந்தனா். பின்னா் அதே வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். மேல் திருத்தணி பகுதிக்கு அருகே சென்றபோது எதிரே வந்த தண்ணீா் டிராக்டா் அவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், இருவரும் படுகாயம் அடைந்தனா்.

அவா்களை அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜயசேகா் இறந்தாா். மணிகண்டன் படுகாயத்துடன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய டிராக்டா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com