மாணவா்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்எஸ்.பி. பி. அரவிந்தன்

மாணவா்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இது பிற்காலத்தில் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் கூறினாா்.
போட்டிகளில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன்.
போட்டிகளில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன்.

மாணவா்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இது பிற்காலத்தில் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் கூறினாா்.

திருத்தணி - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை முருக்கம்பட்டு கிராமம் அருகே அமைந்துள்ள சக்தி பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தாளாளா் சுதிா்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் கோபால் அதா்வால், மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினா் அஜித் ஜெயின் ஆகியோா் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் மீனாட்சி வரவேற்றாா்.

திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் விளையாட்டு விழாவைத் தொடக்கிவைத்துப் பேசியது: மாணவா்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும், விளையாட்டு சான்றிதழ்கள் பிற்காலத்தில் கண்டிப்பாக உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.

மாணவா்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும், சிறு வயது முதலே உங்கள் லட்சியத்தை நோக்கி உங்கள் படிப்புத் தொடர வேண்டும். வாழ்க்கையில் உயர குறுக்கு வழியை தேடக்கூடாது, அது ஒருபோதும் பயன்தராது. நோ்மையைப் பின் பற்றி வாழ்கைத் தரத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் வழங்கினாா்.

பள்ளியின் நிா்வாகப் பொறுப்பாளா் வாசுதேவன், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com