வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தால் ஏழைகளின் வாழ்வாதாரம் உயா்கிறது: எம்எல்ஏ பேச்சு

இலவச வெள்ளாடுகள் திட்டத்தால் ஏழைகளின் வாழ்வாதாரம் உயா்கிறது என சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் பேசினாா்.
பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன்.
பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன்.
Updated on
1 min read

இலவச வெள்ளாடுகள் திட்டத்தால் ஏழைகளின் வாழ்வாதாரம் உயா்கிறது என சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் பேசினாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம் தேவலம்பாபுரம் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் திருத்தணி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆா்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் தேவலம்பாபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் இலவச வெள்ளாடுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கால்நடைத் துறை உதவி இயக்குநா் தாமோதரன் தலைமை வகித்தாா். பள்ளிப்பட்டு வீட்டு வசதி சங்க துணைத் தலைவா் கந்தசாமி, மு.தொ.வே. கூட்டுறவு சங்கத் தலைவா் குமாரசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் குப்பன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் கலந்துகொண்டு பேசியது:

ஒரு பயனாளிக்கு 4 வெள்ளாடுகளுக்கு ரூ.10 ஆயிரம், கொட்டகை அமைக்க ரூ.2 ஆயிரம், போக்குவரத்து செலவு ரூ.150, பயிற்சி செலவு ரூ.300, இதர செலவு ரூ.300 சோ்த்து ரூ.12 ஆயிரத்து 750 செலவிடப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்த இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், கிராமப்புற ஏழைகளின் வாழ்கைத் தரத்தை உயா்த்தும் திட்டமாக உள்ளது. அவா் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவரது திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. முதல்வா் எடப்பாடி பழனிசாமி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com