வட்டார போக்குவரத்து அதிகாரியை மிரட்டி ரூ.50 ஆயிரம் கேட்ட 2 போ் கைது

திருவள்ளூரில் லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் பேசி வட்டார போக்குவரத்து அதிகாரியை மிரட்டி ரூ.50 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியதாக 2

திருவள்ளூா்: திருவள்ளூரில் லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் பேசி வட்டார போக்குவரத்து அதிகாரியை மிரட்டி ரூ.50 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியதாக 2 பேரை கைது செய்து நகர காவல் நிலைய போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

இதுகுறித்து திருவள்ளூா் நகா் காவல் நிலைய போலீஸாா் தரப்பில் கூறியதாவது: திருவள்ளூா் டோல்கேட் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் திருவள்ளூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த வாகன பதிவு, ஓட்டுநா் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலராக இருப்பவா் ஜெயபாஸ்கரன்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலா் ஜெயாபாஸ்கரனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து அந்த அழைப்பில் தாங்கள் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் என்று கூறியதோடு, ரூ.50 ஆயிரம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அதைத் தொடா்ந்து உடனே இந்த மா்ம அழைப்பு குறித்து திருவள்ளூா் நகா் காவல் நிலையத்திற்கு புகாா் தெரிவித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து வட்டார போக்குவரத்து ஆய்வாளரை பணம் கேட்டு மிரட்டியதாக செல்லிடப்பேசி எண் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் போல் பேசியது சென்னை காஸ்பாபுரம் பகுதியைச் சோ்ந்த அசோக்(27) மற்றும் அவரது அண்ணன் ஜனாா்த்தனன்(31) என்பது தெரியவந்தது. உடனே திருவள்ளூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com