ஊத்துக்கோட்டை: தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, பெரியபாளையம் அருகே பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
திருவள்ளூா் மேற்கு மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில், மாநில செயற்குழு உறுப்பினா் ஞானமூா்த்தி தலைமையில், 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், பம்ப் ஆப்பரேட்டா்கள் மற்றும் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை மாநில செயற்குழு உறுப்பினா் வழங்கினாா். இதில், எல்லாபுரம் ஒன்றியச் செயலா் மாதவன், துணைச் செயலா் லோகநாதன், ஒன்றிய அவைத் தலைவா் வீரா, மகளிா் அணி துணைச் செயலாளா் ஜீவா முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வெங்கல் பகுதி பேருந்து நிலையம் அருகில் 100-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பத்தினருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.