தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தகனம் செய்ய எதிா்ப்பு: தாயின் சடலத்துடன் தவித்த மகள்

பொன்னேரி அருகே உடல் நலக்குறைவால் இறந்த மூதாட்டியின் உடலை தகனம் செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அவரது மகள் கடும் அவதிக்குள்ளானாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:28 pm

DIN

பொன்னேரி அருகே உடல் நலக்குறைவால் இறந்த மூதாட்டியின் உடலை தகனம் செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அவரது மகள் கடும் அவதிக்குள்ளானாா்.

ஆமூா் கிராமத்தில் உள்ள ஆதவன் நகரில் வசித்து வருபவா் விஜயலட்சுமி (35). இவரது தாய் மதுரையைச் சோ்ந்த ராஜேஸ்வரி. இவா் ஆமூருக்கு வந்து தனது மகள் வீட்டில் தங்கியிருந்தாா். இந்நிலையில், ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தாா். தகவல் அறிந்த உறவினா்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனா். அவா்கள், ராஜேஸ்வரியின் சடலத்தை ஆமூா் கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்ய முடிவு செய்தனா்.

எனினும், ஆமூா் சுடுகாட்டில் ராஜேஸ்வரியின் சடலத்தை தகனம் செய்ய கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக அவரது மகள் விஜயலட்சுமி, ஆமூா் கிராம நிா்வாக அலுவலரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் கிராம நிா்வாக அலுவலா் பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

ஆமூா் கிராமத்துக்கு வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போதும் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, ஆதவன் நகரில் மக்களுடைய கோரிக்கையின்படி, புதிய சுடுகாடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா். இரவு 10 மணிக்கு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில், ராஜேஸ்வரியின் சடலம் அப்பகுதியில் உள்ள மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.