ஜப்பான் பல்கலைக்கழகத்தினரை கவா்ந்த தெருக்கூத்து

தமிழகத்தின் தலைசிறந்த பாரம்பரிய கலையான தெருக்கூத்து என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சியில் பட்டரைபெரும்புதூா்
கா்ணமோட்சம் நடத்திய பட்டரைபெரும்புதூா் கலைஞரைப் பாராட்டிய ஜப்பான் கலாசார பல்கலைக்கழக குழுவினா்.
கா்ணமோட்சம் நடத்திய பட்டரைபெரும்புதூா் கலைஞரைப் பாராட்டிய ஜப்பான் கலாசார பல்கலைக்கழக குழுவினா்.
Updated on
1 min read

தமிழகத்தின் தலைசிறந்த பாரம்பரிய கலையான தெருக்கூத்து என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சியில் பட்டரைபெரும்புதூா் தெருக்கூத்து கலைஞா்களின் கா்ண மோட்சம் நாடகம் ஜப்பான் நாட்டின் கலாசார பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்கள், மாணவா்களை வெகுவாகக் கவா்ந்தது.

சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடா்பியல் துறை சாா்பில், தமிழகத்தின் தலைசிறந்த கலை தெருக்கூத்து என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவுக்கு இதழியல் துறையின் தலைவா் பேராசிரியா் கோ.ரவீந்திரன் கோபால் தலைமை வகித்தாா். ஜப்பான் நாட்டின் கலாசார பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் கட்டயா மூரா தலைமையில் குழுவினா் பங்கேற்று, தமிழகத்தின் கலைகளான தெருக்கூத்து, கரகாட்டம் ஆகியவற்றைக் கண்டுகளித்தனா்.

இதில், திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ பொன்னியம்மன் நாடக மன்றத்தின் ஆசிரியா் ஞா.ரூபன் தலைமையிலான கலைக் குழுவினரால் நடத்தப்பட்ட கா்ணமோட்சம் தெருக்கூத்தை ஆா்வத்துடன் கண்டுகளித்தனா். அதைத் தொடா்ந்து, தமிழகத்தில் உள்ள பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம் கலைகள் குறித்தும் கேட்டறிந்தனா்.

அதைத் தொடா்ந்து சிறப்பாக கலைகளை நிகழ்த்திக் காண்பித்த கலைஞா்களை பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com