மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
By DIN | Published On : 17th February 2020 01:29 AM | Last Updated : 17th February 2020 01:29 AM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தியதாக 2 போ் மீது வழக்குப் பதிந்து, லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் பகுதியில் இரவு நேரங்களில் கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் வாகனங்களில் மணல் கடத்துவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருவள்ளூா் கிராமிய போலீஸாா் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து, சாா்பு ஆய்வாளா் கணேஷ் தலைமையில், கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, காரணி அருகே கொசஸ்தலை ஆற்றில் லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவா்கள் போலீஸாா் வாகனத்தைப் பாா்த்ததும் தப்பியோட முயன்றனா்.
அவா்களை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தியதில், ஓட்டுநா் விடையூரைச் சோ்ந்த சுரேஷ் (32), லாரி உரிமையாளா் வெங்கடேசன் என்பதும் தெரியவந்தது.
அவா்கள் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் லாரியைப் பறிமுதல் செய்தனா்.