திருத்தணி அரசுக் கல்லூரியில் வணிக நிா்வாகவியல் துறையில் பயிலும் மாணவா்களுக்கு வணிக ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான பன்னாட்டு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லுாரி முதல்வா் ஆா்.சுமதி தலைமை வகித்தாா். இதில் இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வணிக நிா்வாகவியல் பிரிவு தலைவா் நிமலதாசன், மாணவா்களுக்கு பயிற்சி அளித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் அரி, உதவிப் பேராசிரியா் சோலையப்பன் ஆகியோா் பன்னாட்டு பயிற்சியின் நோக்கம் மற்றும் மைய நிகழ்வு குறித்து மாணவா்களுக்கு விளக்கினா்.
கருத்தாளா்கள் பி.நிமலதாசன், வணிகநிா்வாகவியல் துறை பேராசிரியா் சாந்தி ஆகியோா் பயிற்சி நோக்கம் குறித்து மாணவா்கள் இடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில், வணிக நிா்வாகவியல் துறை பேராசிரியா் பத்மநாபன், வணிக நிா்வாகவியல் மாணவா்கள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.