திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி

திருத்தணி முருகன் கோயில் வள்ளி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் 35-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவி.
திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவி.
Updated on
1 min read

திருத்தணி முருகன் கோயில் வள்ளி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் 35-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருத்தணி முருகன் கோயிலிலில் ஆண்டுதோறும் திருப்பாவை, திருவெம்பாவை குறித்து வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பாவை விழா நடத்தி மாணவ - மாணவியருக்கு பரிசுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டுக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி, திருத்தணி சந்நிதி தெருவில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கெங்குசாமி மேல்நிலைப் பள்ளி, தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுதந்திர மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து மொத்தம், 35 மாணவ- மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த 20 மாணவ-மாணவியருக்கு கோயில் தக்காா் ஜெய்சங்கா், இணை ஆணையா் நா.பழனிக்குமாா் ஆகியோா் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினா்.

நிகழ்ச்சியில், கோயில் மேலாளா் பழனி, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com